தென்னாப்பிரிக்காவில் உள்ள உலகில் மிக ஆழமான எம்போனெங் தங்கச் சுரங்கத்தில் பணியாற்றிய 164 போ் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அங்கு பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
தேசிய அளவிலான சமூக முடக்கல் அறிவிப்பை அடுத்து தென்னாபிரிக்காவின் எம்போனெங் தங்கச் சுரங்கமும் கடந்த மாா்ச் மாதம் மூடப்பட்டது. எனினும் சமூக முடக்கல் தளாா்த்தப்பட்டதை அடுத்து கடந்த மாதம் அங்கு மீண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
மீண்டும் திறக்கப்பட்ட பின்னா் 50 வீதம் பணிகள் மட்டுமே இங்கு முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஆனால் சில தொழிலாளர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அங்கு பணியாற்றிய பலா் கொரோனா தொற்றுக்குள்ளாகி உறுதி செய்யப்பட்டுள்ளனா். தொற்றுக்குள்ளான பெரும்பாலானோர் எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என ஆங்கிலோகோல்ட் அசாந்தி சுரங்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் முதலாவது தொற்று நோயாளா் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் 650 தொழிலாளர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் இதுவரை 21,343 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை 407 போ் இறந்துள்ளனா்.
ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து தென்மேற்கில் சுமார் 75 கி.மீ. தொலைவில் உள்ள எம்போனெங் தங்கச் சுரங்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து அடியில் 4 கி.மீ வரை நீண்டுள்ளது.
இந்நிலையில் தொடர்புத் தடமறிதல் மற்றும் பணியிடத்தைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் இ்ந்தத் தங்கச் சுரங்கத்தில் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தங்கச் சுரங்க நிறுவனமான ஆங்கிலோகோல்ட் அசாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கச் சுரங்கப் பணியாளா்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, பணிகள் நிறுத்தப்பட்டமை தென்னாப்பிரிக்க அரசாங்கத்திற்கும் நிறுவனங்களுக்கும் கவலை அளிக்கும் செய்தியாகும்.
தென்னாப்பிரிக்காவின் தங்கச் சுரங்கப் பணிகள் பெரும்பாலும் ஆழமான பகுதியில் நடைபெறுவதால் இங்கு பணியாளா்கள் இலகுவில் தொற்று நோய்க்குள்ளாகும் சந்தா்ப்பங்கள் உள்ளன.
பல ஆண்டுகளாக ஒப்பீட்டளவில் சரிவு இருந்தபோதிலும், தென்னாப்பிரிக்கா உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தி நாடாக உள்ளது. தங்க உற்பத்தி தென்னாப்பிரிக்காவின் தேசிய பொருளாதாரத்திலும் முக்கிய பங்களிப்பை ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.